தன் குடிமக்கள் அனைவருமே திருடர்களாகக் கொண்ட ஒரு நாடு இருந்தது. இரவில் எல்லோரும் மாற்றுச் சாவிகளை எடுத்துக்கொண்டு, லாந்தர் விளக்குகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, அக்கம் பக்கத்து வீட்டில் திருடச் சென்றுவிடுவர். திருடிய பொருள் மூட்டைகளுடன் அவர்கள் விடியற்காலையில் திரும்பி வந்து பார்க்கும்போது, அவர்களின் சொந்த வீட்டில் களவு போயிருக்கும். எல்லோரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், யாரும் எதையும் இழக்கவில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து திருடினார்கள், அந்த மற்றவர் மீண்டும் இன்னொரு மற்றவரிடமிருந்து திருடினார், கடைசி நபர்…